சொல்வன்மை (65) – 647 Power of Speech
சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகழ்வெல்லல் யார்க்கும் அரிது.
No foe defies the speaker clear 647
Flawless, puissant, and free from fear.
விளக்கம் : நல்ல பொருளுடைய வலுவான நற்சொற்களை உபயோகித்தலும், சோர்வில்லாமிலும் , எந்த நிகழ்விற்க்கும் அஞ்சாமால் தான் மேற்கொண்ட காரியத்தை செய்பவனை, யாராலும் இகழ்ந்து பேசியோ,அல்லது அவமான படுத்தியோ,பலத்தினோலோ வீழ்த்தி விட முடியாது.
இந்த குறளுக்கு ஒரு நல்ல உதாரணத்தை நாம் யோசித்து பார்த்தால் , பல நபர்களின்/ தலைவர்களின் தோல்வியும் , அவர்களின் வார்த்தை பிரயோகத்தினால் வந்த கேடும் நமக்கு நினைவுக்கு வரும்,
ஆனால் ஒர் உதாரணத்திற்கு..
ராமாயணத்தில் அனுமானின் கதா பாத்திரத்தை சற்று யோசித்துப் பார்ப்போம்.
அனுமான் சொற்பிரயோகத்தில் மிக தெளிவாக பேசுவார், ( உதாரணமாக முதன் முறையாக ஶ்ரீ.ராம, இலக்ஷமணர்களை வனத்தில் சந்திக்கும் போது “அவர்கள் யார் என்று தெரியாத போது மரியாதை நிமித்தமாக “ சமஸ்கிருத்ததில்(மொழி) நல்ல தேர்ந்தெடுத்த இதமான வார்த்தைகளை கொண்டு பேசி தன்னை அறிமுக படுத்திக் கொள்வது,
இலங்கை அசோகவனத்தில் சிம்சுக மரத்தினடியில் தூக்கிட்டு சாக சீதாதேவி முயற்சிக்குக்கும் தருணத்தில் “ தசரத புத்திரன் ஶ்ரீ.ராமனின் தூதன்” என்று ஆரம்பித்து பாடி , சீதாதேவிக்கு மனநிம்மதியை கொடுப்பது.
இராவணனின் மந்திரி சபையில் தான் தூதுவனாய் வந்து இருப்பது தெரிந்தும் மதித்து உட்கார ஒரு ஆசனம் கூட தராததானல் தன் வாலாலேயே ஒரு பெரிய மேடை அமைத்து ராவணனுக்கு சரிசமாய் உட்கார்ந்து கொண்டு உபதேசித்தல், அதை கேட்டு விபிஷணன் மன மாறுதல் அடைந்தது.
இலங்கையின் இராவணன் அரசவையில் அனுமனின் வாலில் நெருப்பு வைத்து தண்டித்த போதும் சோர்ந்து விடமால் திரும்ப வீறு கொண்டு இலங்க தகனத்தை செய்தது.
ஶ்ரீ ராமனை சந்திக்கும் போது ,”கண்டேன் சீதையைய் என்று கூறி என்று ஒரு ஷண நேரத்திற்கு கூட ஒரு ஶ்ரீ ராமனுக்கு ஒரு எதிர்பார்ப்பு ஆவலை தவிர்த்தல் ,
விபிஷணனின் சரணாகதியை சரியே என்று சுக்கிரீவனுக்கு தெளிவாய் உணர்த்துதல்
போரில் ராம இலஷ்மணர்கள் இராவணனின் மகன் இந்திரஜித் ( மேகநாத்)தின் நாகஸ்திரத்தில் கட்டுடண்டபோது தன் தலைவனின் நிலை கண்டு அனுமான் துவண்டு போய் விடமால் , விவேகத்துடன் உடனே மருந்து தேட இமயமலைக்கு கிளம்பி, தேட கால அவகாசம் இல்லாததானால் சஞ்சிவி மலையையே கொண்டு வந்து அவர்களின் மயக்கம் தெளிவித்தல் போன்ற சகல நிகழ்வுகளிலும்
அனுமனின் சொல் திறமையும், சோர்வில்லா தன்மையும்,எந்த இடர்பாடுகள் வந்தாலும் எதிர்த்து துணிந்து போராடுதல் குணங்கள் கொண்டது தெளிவாய் புரியும்.
இராமாணயத்தில் ஶ்ரீ ராமனின் செயல்பாடுகளில் கூட சிலருக்கு மாற்று கருத்துகள் இருக்கும், ஆனால் அனுமானின் செயல்களில் மாற்றுக் கருத்துக்களே இருக்காது.